வருத்தம் தெரிவிக்கும் இலங்கை உதைபந்தாட்ட சங்கம்

மன்னாரை சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் பியூஸின் மரணச்செய்தி எம்மை துயரமடைய செய்துள்ளதுடன், வடக்கு மாகாணத்திற்கே பேரிழப்பு என வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப பொருளாளருமான அ.நாகராஜன் தெரிவித்துள்ளார். பியூசின் மரணம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும் இலங்கை உதைபந்தாட்ட அணியின் வீரருமான பியூஸ்லஸ் மாலைதீவில் அண்மையில் உயிரிழந்தார். அவரது இழப்பு எமக்கு அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கின்றது. … Continue reading வருத்தம் தெரிவிக்கும் இலங்கை உதைபந்தாட்ட சங்கம்